Tuesday, August 13, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 182

காதலில் ஊடலுக்கு ஒரு சிறப்பு இடமுண்டு.

ஊடல் காதலினை வளர்க்கும்.ஆனால் அவ்வூடல் ஓரளவுடன் இருக்க வேண்டும்.அப்படியின்றி கால அளவு நீடித்தால்..அக்காதலே கேள்விக்குறியாகிவிடலாம்.

ஊடலுக்கும், கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல ஓரளவே இருக்க வேண்டுமாம்.வள்ளுவனின் ஒப்பீட்டினைப் பாருங்கள்..

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல் (1302)

ஊடலுக்கும், கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும்.அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்

ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி வருத்துவதாகுமாம்

அலைந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல் (1303) 

No comments: