Saturday, August 31, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 20

தெரிந்து தெளிதல் இது அதிகாரம்

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதிப் புரிந்து கொள்ளலாம் என்றும்..

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து அமர்த்திக் கொண்டால், அவரால் வருங்காலத் தலைமுறையினருக்கும் நீங்காத துன்பம் விளையும் என்றும் சொல்கிறார்.

அத்துடன் நில்லாது...கீழ்கண்ட குறளினையும் தனது வழக்கமான சொல்விளையாட்டுடன் சொல்கிறார்

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் (509)

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது

தேறற்க,தேராது, தேர்ந்தபின்,தேறுக, தேறும்....வள்ளுவர்க்கு நிகர் வள்ளுவரே  தேர்ந்த உண்மை 

No comments: