Monday, August 12, 2019

வள்லுவரும் ஒப்பீடுகளும் - 176

மயக்கம் தரும் மாலைப்பொழுது.

காதலரைப் பிரிந்து காதலி தவிக்கின்றாள்.அவனை இரக்கமற்றவன்  என்கிறாள்..அதற்குத் துணையாக மாலைப்பொழுதையும் துணைக்கு இழுக்கின்றாள்

மயங்கும் மாலைப் பொழுதே!நீயும் எம்மைப்போல துன்பப்படுகிறாயே!எம் காதலர் போல உன் துணையும் இரக்கமற்றதோ?! என்கிறாள்.

அதே மாலைப்பொழிதினை எப்படி இருக்கிறது என்றும் சொல்கிறாள்

 காதலர் பிரிந்திருக்கும் போது வரும் மாலைப்பொழ்து, கொலைக்களத்தில் பகைவர் வீசும் வாளினைப் போல இருக்கிறதாம்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும் (1224)

காதலர் பிரிந்திருக்கும்போது வருகின்ற மாலைப்பொழுது கொலைக்களத்தில் பகைவர் ஓங்கி வீசுகின்ற வாளைப்போல  வருகிறது

No comments: