Wednesday, August 28, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 4

ஒருவர் நமக்குச் செய்த கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்ரு விட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை..

என்றெல்லாம் சொன்ன வள்ளுவர் மேலும் சொல்கிறார்...

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

என.
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல.அவர் தீமைசெய்திருந்தால் அதை மட்டும் அக்கணமெ மறந்து விடுவது நல்லது.

நன்றி,நன்றன்று,நன்றல்லது, நன்று  என்ற சொல்விளையாட்டை ரசிப்போம் 

No comments: