Monday, August 5, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 163

நான் விரும்பும் பாவைக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக...என் கண்ணில் கருமணியில் உள்ள பாவையே ! அவளுக்கு இடமளித்து நீ விலகி விடு என்பவர் சொல்கிறார்..

அவள் என்னோடு கூடும் போது.. (எப்படியிருக்கிறதாம் தெரியுமா?) உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னை விட்டு நீங்கும் போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகின்றேன்

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து (1124)

அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா?

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து (1127)

(அவளது) காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கின்ற காரணத்தினால், (கண்ணுக்கு) மை தீட்டினால் ..எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்

No comments: