Saturday, August 31, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 18

நன்கு சிந்தித்தப் பின்னே ஒரு செயலில் ஈடுபட வேண்டும்.ஈடுபட்டப்பின் சிந்திப்போம் என்பது தவறு.

தம் நிலைமைக்கு  மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் (466)

செய்யக் கூடாததைச் செய்வதால்  கேடு ஏற்படும்.செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

செய்தக்க,செய, செய்தக்க, செய்யாமை என தெரிந்து செயல்வகை எனும் அதிகாரத்தில் வள்ளுவனின் சொல்விளையாட்டு இது

No comments: