புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளது கண்கள்.நான் நடுங்குமாறு துன்பத்தை செய்யாது என்றவர்..
மங்கையையும், மதம்கொண்ட யானையின் முகபடாத்தையும் ஒப்பிடுகிறார்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் (1087)
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்.அது மங்கை ஒருத்தியின் சாயாத மார்பகத்தில் அசைந்தாடும் ஆடைபோல இருந்தது
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலங்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செழிப்பான அணிகலன் எதற்கு? என்கிறார் இக்குறளில்.
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து (1089)
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்.ஆனால் கண்டாலே மயக்கம் தருவது காதல் என்கிறார் அடுத்து.
No comments:
Post a Comment