Saturday, August 31, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 15

செவி வழியாக இன்பம் தரும் செவியுணவு இல்லாத போது சிறிதளவு உணவு வயிற்றுக்கும் கொடுக்கப்படும்

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்விச் செல்வம், வழுக்கு நிலத்தில் நடக்கும் போது ஊன்றுகோலாய் பயன்படும்...

இப்படியெல்லாம் கேள்வி எனும் அதிகாரத்தில் சொன்னவர் மேலும் சொல்கிறார்.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை (411)

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

செல்வத்துள்,செல்வம், செவிச்செல்வம்,அச்செல்வம், செல்வத்துள்....ஆஹா....

No comments: