Thursday, August 29, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 8

ஒவ்வொருவரும் புகழுடன் விளங்க வேண்டுமாம்.புகழ் எனப்படுவது உயிர் போலவாம்.உகழ் எனப்படும் உயிர் இல்லாத மனித உடலைச் சுமந்தால், இந்தப் பூமி நல்ல விளைச்சலில்லாத நிலமாகக் கருதப்படுமாம்

நம் காலத்திர்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழினைப் பெறாவிட்டால்,அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழி என வையம் கூறும்

மேலும் சொல்கிறார்..

நாம் ஏதேனும் ஒரு துறையினில் ஈடுபட விரும்பினால்,அத்துறையில் ஈடுபட்டு புகழுடன் விளங்க வேண்டும்.இல்லாதவர்கள் அத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (236)

புகழ் எனும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இக்குறளில் ..தோன்றின்,தோன்றுக,தோன்றலின், தோன்றாமை என தமிழ் விளையாடுகிறது அல்லவா?

இதே அதிகாரத்தில் மற்றொரு குறளில் சொல்கிறார்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர் (240)
என்கிறார்.

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும்.புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

வசையொழிய, இசையொழிய என சொல்விளையாட்டில் இடுபட்டவர் தொடர்ந்து வாழ்வாரே,வாழ்வார்,வாழ்வாரே,வாழாதவர் என்றும் தன் விளையாட்டினை இக்குறளில் தொடர்ந்துள்ளார்

No comments: