Sunday, August 11, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 174

காதல்....

ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்.அப்படியில்லாமல்..ஒரு தலைக்காதல் என்பது எது போலவாம்...தெரியுமா?

காவடி எடுப்பவர்களின் , காவடித் தண்டில் இரண்டு பக்கங்களிலும் ஒரே அளவு கனம் இருக்க வேண்டுமாம்.இல்ல்லாவிடின் சுமப்பது கடினமாய் அமையுமாம்.அதுபோலத்தான் ஒருதலைக்காதல் என்கிறார்.

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது (1196)

காவடித் தண்டின் இரு பகக்ங்களும் ஒரே அளவு கனமாக இருப்பது போல, காதலும் ஆண்,பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்.ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை..துயரமும் உருவாகும்.

கடலைத் தூர்ப்பது என்பது எவ்வளவு இயலாத காரியம்.ஆனால் அது கூட எளிதானதாம்..பின் அதைவிட கடினமானது என்ன என்கிறார்?

அன்பில்லாதவரிடம் துன்பத்தினைச் சொல்லி ஆறுதல் பெற எண்ணுவது..

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு (1200)

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும் 

No comments: