Friday, August 30, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 11

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாது.ஒருவருக்குத் தீங்கு விளைவித்து விட்டோம் என ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே,அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.

இன்னா செய்யாமை அதிகாரத்தில் இப்படிச் சொல்பவர்..சொல்கிறார்...

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை  வேண்டு பவர் (320)

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்.எனவே தீங்கற்ற வாழ்வினை விரும்புபவர்கள், பிறருக்குத் தீங்கிழைக்கக் கூடாது

நோயெல்லா, நோய்செய்தார்,நோய்செய்யார். நோயின்மை..அடடா...என்னே ஒரு சொல் விளையாட்டு 

No comments: