சந்திர கிரகணம் என்பதை சந்திரனை பாம்பு விழுங்குவதாக படிக்காத, மூடநம்பிக்கை உள்ளவர்கள் கூறுவர்.
அதுபோல காதலரை சந்தித்தது ஒரு நாள் என்றாலும், அந்நிகழ்வு பல நாட்களாக நடக்கும் நிகழ்வாக ஊர் முழுவதும் பரப்பப்படுமாம்
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று (1146)
காதலரை சந்தித்துக் கொண்டது ஒருநாள் என்றாலும் சந்திரனை பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் கிரகணம் எனும் நிகழ்வினைப்போல, அந்தச் சந்திப்பு ஊர்முழுதும் அலராகப் பரவியது
ஒருவரை ஒருவர் விரும்பி மலரும் காதலுக்கு ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்கள் எருவாகவும்,காதலரின் அன்னைமாரின் கடுஞ்சொற்கள் நீராகவும் ஆகி அக்காதல் எனும் பயிர் வளரவே பயன்படுமாம்
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய் 91147)
ஒருவரை ஒருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே அன்றி கருகிப் போய்விடாது
No comments:
Post a Comment