Friday, August 9, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 170

காதலை கடலுடன் ஒப்பிட்டு..காதல் கடல் போல சூழ்ந்து கொண்டிருக்கிறது என்றவர்..கடலைக் கடக்க தோணி உண்டு,ஆனால் காதல் கடலைக் கடக்க பாதுகாப்பான தோணி கூட இல்லை என்கிறார்.

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல் (1164)

காதல் கடலைப் போல சூழ்ந்து கொண்டு வருத்துகிறது.ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை..

காதலையும்..கடலையும் அடுத்து வரும் குறளிலும் ஒப்பிடுகிறார்.

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது (1166)

காதல் இன்பம் கடல் போன்றது.காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ., கடலைவிடப் பெரிது

No comments: