Wednesday, August 7, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 165

மலர்விழியாளுக்கு  காதலின் மாண்பினை உணராமல் ஊரார் பழித்துரைத்தால் அதுவே மறைமுக உதவியாய் இருக்குமாம்.

ஊரார் தூற்றுவதால் காதல் வளருகிறதாம்.இல்லையேல் காதல்கொடி வளமிழந்து வாடிவிடுமாம்.

கள் உண்பவன் சிறிது நாளில் கள்ளினையே விரும்பி அதை உண்பதை விடமுடியாதது போன்றதாம் காதல்.அது வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருக்குமாம்

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது (1145)

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளினையே விரும்புவது போன்றதாகும் 

No comments: