Wednesday, August 14, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 184

காதலரிடையே ஊடல்.இதனால் அவர்களின் இன்பமான காலத்தில் அளவு குறைந்துவிடுமே என்ற ஒருவகைத் துன்பமும் அவர்களுக்கு ஏற்படுமாம்.

காதல் வாழ்க்கையில் பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் அவ்வப்போது ஏபட வேண்டுமாம்.அபப்டியில்லை எனில் அது எப்படிப்பட்டது போலாகுமாம் தெரியுமா?

முற்றிப் பழுத்து உபயோகமின்றி அழகிய பழம் போலவும் (பெரும்பிணக்கு), முற்றாத இளம் பிஞ்சு போலவும் (சிறுபிணக்கு)  ஆகுமாம்

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று (1306)

பெரும்பிணக்கும், சிறுபிணக்கம் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

No comments: