மது அருந்தினால்தான் இன்பம்.ஆனால் காதல் நினைத்தாலே இன்பமாம் .
காதலர்களுக்கிடையே காதல் பனையளவாகப் பெருகிடும் போது ஊடலும் தினையளவாவது இல்லாமல் இருக்காதாம்.
காதலன் பிரிந்து செல்கிறான்..பின்னர் அவனைக் காணும்போது அவன் பிரிந்து சென்ற குற்றத்தை காதலி மறந்துவிடுகிறாளாம்.எதுபோல தெரியுமா..கண்ணில் மைதீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோல் காணாமல் போனதுபோலவாம்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து (1285)
அடுத்து..
காதலனுடன் ஊடல் கொள்கிறாள்..ஆனால் அந்த ஊடலால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை என அறிந்தும்.இது எப்படியிருக்கிறது என்றால்..வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போலவாம்.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலத்து (1287)
மேலும் சொல்கிறார்
காதல் இன்பம் மலரைவிட மென்மையானதாம்.அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் (1289)
காதலர்களுக்கிடையே காதல் பனையளவாகப் பெருகிடும் போது ஊடலும் தினையளவாவது இல்லாமல் இருக்காதாம்.
காதலன் பிரிந்து செல்கிறான்..பின்னர் அவனைக் காணும்போது அவன் பிரிந்து சென்ற குற்றத்தை காதலி மறந்துவிடுகிறாளாம்.எதுபோல தெரியுமா..கண்ணில் மைதீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோல் காணாமல் போனதுபோலவாம்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து (1285)
அடுத்து..
காதலனுடன் ஊடல் கொள்கிறாள்..ஆனால் அந்த ஊடலால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை என அறிந்தும்.இது எப்படியிருக்கிறது என்றால்..வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போலவாம்.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலத்து (1287)
மேலும் சொல்கிறார்
காதல் இன்பம் மலரைவிட மென்மையானதாம்.அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் (1289)
No comments:
Post a Comment