Tuesday, August 13, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 179

கண் நிறைந்த அழகும், மூங்கில் போன்ற தோளும் என காதலியின் தோள்களை மூங்கிலுக்கு ஒப்பிடும் வள்ளுவர்..

பெண்ணின் அழகுக்கு உள்ளே ஒன்று உள்ளதாம்.அது எதுபோலவாம் தெரியுமா? மணிகள் கோர்த்த மாலையின் உள்ளே மறைந்திருக்கும் நூல் போலவாம்

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு (1273)

மணியாரத்துக்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உள்ளது

ஒரு பெண்ணின் புன்னகைக்குள் காதலனைப் பற்றிய நினைவு உள்ளதாம் எதுபோல தெரியுமா? மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பதைப் போலவாம்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு (1274)

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பதுபோல் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்ரிய நினைவும் நிரம்பியிருக்கிறது

No comments: