Thursday, August 29, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 7

ஈகை எனும் அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார்..

இல்லாதவர்களுக்கு வழங்குவதே ஈகப் பண்பாகும்.மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

நாம் வறுமையில் வாடினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறப்பவரின் பண்பாகும்

இப்படிச் சொன்னவர் மேலும் சொல்கிறார்//

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின் (225)


பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பினைகடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்தாகும்.

ஆற்றுவாராற்றல், பசியாற்றல்,மாற்றுவாராற்றல்...சொல்விளையாட்டு

No comments: