Friday, August 30, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 10

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால், எண்ணியவற்றையெல்லாம் அவனால் உடனடியாகப் பெற முடியும்

என்று சொன்னவர்...மேலும் சொல்கிறார்..

ஒருவன் தன்னத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தை கைவிட வேண்டும்.இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

வெகுளாமை அதிகாரத்தில் வருபவை இவை.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (310)

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார்கள்.சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்

இறந்தார், இறந்தார்,துறந்தார்,துறந்தார்...வியக்க வைக்கிறது அல்லவா?

No comments: