Wednesday, August 7, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 168

காதலன், காதலையை விட்டுப் பிரிகிறான்.அவனின் பிரிவினை எண்ணி எண்ணி காதலி இளைக்கிறாள்.அவளது கை மூட்டிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலை.இதையெல்லாம் பார்க்கும் ஊரார் தூற்றும் நிலை ஏற்படுகிறதாம்.

அதுவாவது பரவாயில்லை..

ஒருவரை ஒருவர் காணாமலும், தொடாமலும் பிரிந்திருக்கும் போது உண்டாகும் காதல் நோய்.உடலையும் ,உள்ளத்தையும் சுடுகின்றதாம்.ஆனால் இந்த சூடு என்பது நெருப்பினால் இல்லையாம்.நெருப்பு தொட்டால் தான் சுடுமாம்.இவர்கள்  நெருப்பு பிரிவில் சுடுகின்றதாம்.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ  (1159)

ஒருவரை ஒருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும், உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை.நெருப்பு தொட்டால் சுடும்.இது பிரிவில் சுடுகின்றதே!

No comments: