Friday, August 30, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 14

அவா அறுத்தல் அதிகாரம்..

ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும்  .அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் (362)

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகின்ற அளவிற்கு ஏற்படுகிற துன்பநிலை ,ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்

வேண்டுங்கால், வேண்டும், வேண்டாமை, வேண்ட... வள்ளுவரின் விளையாட்டு..

அடுத்து

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர் (365)

ஆசை அனைத்தையும் விட்டவரே துறவி எனப்படுவார்.முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

அற்றவர்,அற்றார்,அற்றாக, அற்றது....

No comments: