Friday, August 30, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 9

வாய்மை எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை.என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்

மேலும் சொல்கிறார்..

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (297)

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்

பொய்யாமை,பொய்யாமை, செய்யாமை, செய்யாமை..கவனித்தீர்களா?

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமெ நீங்கும்.மனம் அழுக்குப் படாமல் தூய்மையுடன் விளங்கிட சொல்லிலும், செயலிலும் வாய்மை வேண்டும்

என்றவர்...

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)

என்கிறார்.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளினைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தவன் எனக் காட்டும் ஒளிவிளக்காகும்

விளக்கும், விளக்கு,விளக்கே, விளக்கு !!!!!! 

No comments: