Tuesday, August 13, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 183

மலர் விழி  மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்..என்னும் வள்ளுவர் விழிகளை மலருக்கு ஒப்பிடுகிறார் ஒரு குறளில்

அடுத்து...

ஒரு கொடி வாடியிருக்கிறது.அதன் அடிப்பகுதியை அறுத்தால் என்னவாகும் அதுபோலவாம் ஊடல்புரிந்து பிணங்கி இருப்பவரிடம் அன்பு செலுத்தாமல் விலகியே இருப்பது

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று(1304)

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.  

No comments: