Wednesday, August 7, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 169

ஊற்று நீரானது இறைக்க இறைக்க பெருகும்.இறைக்கின்ற ஊற்றே சுரக்கும் என்பர்.அதுபோலத்தான் காதலாம்.அதனை மறைக்க  மறைக்க பெருகுமாம்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகுமே (1161)

இறைக்க இறைக்க பெருகும் ஊற்று நீர் போல ,பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

காவடி சுமப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா.அவர்கள் சுமை இரண்டு பக்கமும்  இருக்கும்.அதுபோலவாம் காதல் நோயும்.

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து (1163)

பிரிவைத் தாங்க முடியாது உயிர் துடிக்கும் என் உடலானது,ஒருபுறம் காதல்நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகின்றது 

No comments: