Friday, August 9, 2019

வள்ளுவரும்..ஒப்பீடுகளும் - 171

நள்ளிரவு....கடும் வெள்ளம்..தனியாளாக அதன் கரையை கடக்கமுடியாத நபர் போல...நள்ளிரவில்..துணையின்றி தனியாய் நிற்கின்றாள்..காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தமுடியாமல் தவிக்கின்றாளாம்

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன் (1167)

நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கின்றேன்.அதனால் காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகின்றேன்

அதேபோல அடுத்த குறளில் சொல்கிறார்..

காதலர் இருக்குமிடத்திற்கு  என் நெஞ்சத்தைப் போல செல்லமுடியுமானால் (காதலின் நெஞ்சத்தில் குடியிருக்கிறாள் எனக் கொள்ளலாம்), என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய அவசியமில்லை

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண் (1170)


No comments: