Saturday, August 3, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 158

ஒருவருக்கு வரும் நோயைத் தீர்க்க மருந்து இருக்கிறது.ஆனால், காதல் நோய் வந்துவிட்டால், அதைத் தீர்க்கும் மருந்து காதலிதானாம்.

அவளை விட்டு நீங்கினால் சுடக்கூடியதும், நெருங்கினால் குளிரக்கூடியதுமான புதுமையான நெருப்பாம் அவள்.

அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது..எதுபோல இனிமைவாய்ந்ததாம்...
தாமரைக்கண்ணான் உலகம் என்கிறார்களே அதுபோலவாம்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு(1103)

தாமரைக்கண்ணான் உலகம் என்பதுபோல..அது (தாமரைக்கண்ணனின் அடிபற்றியதுபோல ) அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல இனிமை வாய்ந்ததா

வள்ளுவர் மேலும் சொல்கிறார்..நமக்கு விருப்பமான பொருள், நாம் விரும்பிய போதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ, அதுபோல பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குபவையாம்

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் (1105)


No comments: