Saturday, August 3, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 159

காதலர்க்கு மிக இனிமை தருவது காற்றுகூட இடையில் நுழைய முடியா அளவிற்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

காதல் மனையைத் தழுவதற்கு ஒப்பானது ஒன்றுண்டாம்.அது என்ன தெரியுமா? தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து உண்டு களிப்பதாம்.

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு (1107)

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும், பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும்  இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் த்ழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது

தவிர..

அவளின் அழகிய தோள்கள் அமிழ்தம் என்றும்,மேனியை மாம்பழ மேனி என்றும் சில குறள்களில் பெண்ணை ஒப்பிட்டுள்ளார் 

No comments: