Sunday, August 4, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 162

மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேற்பாடு தெரியாமல் விண்மீன்கள் தவிக்கின்றனவாம்.
மேலும் வள்ளுவரின் வர்ணனைகள் சில..

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிவழங்கும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட, மங்கை முகத்தில் இல்லையாம்

மலரைப் போன்ற கண்களையுடைய காதல் மங்கையின் முகம் போல நிலவு இருப்பதாக நிலவு பெருமைப் பட வேண்டுமெனில், பலரும் அறிய தோன்றாமல் இருக்க வேண்டுமாம்(பலர் அறிய தோன்றினால்..அவர்கள் காதல் மங்கையின் முகம் நிலவை விட அழகு என்று சொல்லிவிடுவார்களாம்)

அனிச்ச மலர் மென்மையானது.அதுபோல அன்னத்தின் இறகு மென்மையானது..இவையிரண்டும் என் காதலியின் காலடிகள் பட்டால் அவை அவளுக்கு நெருஞ்சி முள் தைத்தாற்போல துன்பத்தை விளைவிக்குமாம்.அந்த அளவு மென்மையானதாம் அவள் பாதங்கள்

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)


No comments: