Monday, August 12, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 177

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து மாலையில் மலரும் ஒரு நோயாகுமாம்.



காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய் (1227)

மாலையில் காதலர் பிரிந்துள்ள நிலையில், ஒரு மாடுமேய்ப்பவன் புல்லாங்குழல் வாசிக்கின்றானாம்.அந்த புல்லாங்குழலோசை காதலிக்கு அவளைக் கொல்ல நினைக்கும் படைக்கருவியின் ஓசை போல உள்ளதாம்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப் பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயலின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசை போல அல்லவா காதில் ஒலிக்கிறது.

No comments: