Sunday, August 11, 2019

வள்ளுவரும்..ஒப்பீடுகளும் - 175

சாதாரணமாக கள் உண்பவர்கள் போதைத் தரும் இன்பத்திற்காக உண்பதாகக் கூறுவர்.

ஆனால்...கள் உணாடாக்கும் போதையைவிட இன்பம் தரக்கூடியது ஒன்று உண்டாம்.அது காதல் இன்பமாம்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது (1201)

உண்டபோது மட்டும் மகிழ்ச்சியினைத் தரும் கள்ளினை விட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்

காதலன், காதலியைப் பிரிந்து சென்றுள்ளான்.மாலை நேரம் அவளை வாட்டுகிறது.அவளுக்கு அவளது உயிரைக் குடிக்கும் வேலாக மாலைப்பொழுது தெரிகின்றதாம்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது (1221)

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து

No comments: