பெண்ணின் இடையைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை எனலாம்.
அப்படியிருக்கையில்... திருக்குறளில் இல்லாதது ஏதுமில்லை என்றுள்ள போது..வள்ளுவர் மட்டும் இடையை விட்டு வைப்பாரா.
சாதாரணமாக இடையை,கொடியிடை என கொடிக்கு ஒப்பிடுவார்கள்.ஆனால் அந்த மென்மையான கொடியினைவிட மென்மையான ஒன்றை ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
அனிச்ச மலர் பற்றி ஏற்கனவே தனது குறளில் சொன்னவர்..மீண்டும் அனிச்ச மலரை விடவில்லை.அந்த மலரே மென்மையானது எனில் அம்மலரின் காம்பு எப்படியிருக்கும்..அந்த அளவு மென்மையைக் கூட தாங்காதாம் அந்த இடை.அம்மலரை காம்புடன் சூடிக் கொண்டதால் அந்த பாரம் தாங்காது இடை ஒடிந்து விழுந்துவிட்டாளாம்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)
என்கிறார்.
அவளுக்காக நல்ல பறை ஒலிக்கவில்லை.ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்.காரணம்...அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.
அப்படியிருக்கையில்... திருக்குறளில் இல்லாதது ஏதுமில்லை என்றுள்ள போது..வள்ளுவர் மட்டும் இடையை விட்டு வைப்பாரா.
சாதாரணமாக இடையை,கொடியிடை என கொடிக்கு ஒப்பிடுவார்கள்.ஆனால் அந்த மென்மையான கொடியினைவிட மென்மையான ஒன்றை ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
அனிச்ச மலர் பற்றி ஏற்கனவே தனது குறளில் சொன்னவர்..மீண்டும் அனிச்ச மலரை விடவில்லை.அந்த மலரே மென்மையானது எனில் அம்மலரின் காம்பு எப்படியிருக்கும்..அந்த அளவு மென்மையைக் கூட தாங்காதாம் அந்த இடை.அம்மலரை காம்புடன் சூடிக் கொண்டதால் அந்த பாரம் தாங்காது இடை ஒடிந்து விழுந்துவிட்டாளாம்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)
என்கிறார்.
அவளுக்காக நல்ல பறை ஒலிக்கவில்லை.ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்.காரணம்...அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.
No comments:
Post a Comment