Wednesday, August 7, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 167

எரியும் நெருப்பில் நெய்யினை ஊற்றினால் என்னவாகும்?
அந்நெருப்பு மேன்மேலும் கொழுந்துவிட்டு எரியும்.அதுபோல ஊராரின் பழிச்சொல்லால் காதல் உணர்வை அடக்கிடலாம் என எண்ணுவது, அக்காதல் வளரவே உதவும்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல் (1148)

ஊரார் பழிசொல்லிற்கு பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது எரிகின்ற தீயை நெய்யினை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்


No comments: