Friday, August 30, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு- 12

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க வேண்டுமாயின், எல்லாம் இருக்கும் போதே அவற்றைத் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

எதன் மீதும் பற்று இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும்.ஒன்றின் மேல் பற்று வைப்பினும்,அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.

துறவு எனும் அதிகாரத்தில் இப்படியெல்லாம் சொன்னவர் மேலும் சொல்கிறார்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)

ஒருவன் பலவகையான பற்றுகளில் எந்த ஒன்றினை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம் அவனை அணுகுவதில்லை

யாதனின், யாதனின், அதனின், அதனின் ..வள்ளுவரின் சொல்விளையாட்டு 

No comments: