Saturday, August 3, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் - 160

அனிச்ச மலர் மென்மையானது மோப்பக் குழயும் என்றுள்ளார் ஒரு குறளில்.அந்த மென்மையான மலரைவிட மென்மையானவள் என் காதலி என்பவர்

அடுத்தடுத்த் குறள்களில் பெண்ணை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்.

அவளது..மலரே கண்டு வியக்கும் மலராம்
முத்துப்பல் வரிசை
மூங்கிலனைய தோள்
மாந்தளிர் மேனி மயக்கமூட்டும் நறு மணம்
மையெழுதிய வேல்விழி
குவளை மலர்கள் கண்டால்"நாம் இவள் கண்களுக்கு ஒப்பாகவில்லையே" எனத் தலை குனிந்து நிலம் நோக்குமாம்

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)

(என் காதலியைக்) கண்டால் குவளைமலர்கள் "இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடையவில்லையே:"எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்

No comments: