Friday, August 9, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகளும் -172

காதலர் பொருளீட்ட காதலையை விட்டுச் சென்று விட்டார்.அந்தத் தற்காலிகப் பிரிவும் காதலிக்கு பசலை நிறந்தை மேனியில் உண்டாக்கிவிடுமாம்.

அதேபோல உடலில் பசலை நிறம், காதலன் இறுகத் தழுவிய பின்னர் அவனது பிடி சற்றுத் தளர்ந்தாலும் காதலிக்கு பசலை நிறம் படர்ந்துவிடுமாம்.இது எது போல என்றால்...விளக்கின் ஒளி சற்றே குறைந்தாலும் உடனே பரவிடும் இருள் போலவாம்.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (1186)

விளக்கின் ஒளி குறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலனின்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசுமைநிறம் படர்ந்து விடுகிறது










No comments: