Wednesday, August 28, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 3

விருந்தினரை வெளியே விட்டு விட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும், அதைத்தான் மட்டுமே உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல என்றும்.

விருந்தினரை நாள் தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை என்றும்

'விருந்தோம்பல்" அதிகாரத்தில் சொன்னவர்..மேலும் சொல்கிறார்....

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (80)

என்று..

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய  விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

செல்விருந்து, வருவிருந்து,நல்விருந்து....தமிழ் விளையாட்டு.


No comments: