Thursday, August 1, 2019

வள்லுவரும்..ஒப்பீடுகளும் - 157

காதலனைப் பார்க்கும் போது மெல்லச் சிரிப்பாள்.அப்போது துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புது பொலிவுடன் இருப்பாளாம்.

அவனும்..நோக்கி..அவளும் நோக்கினால்..ஒத்த அன்புடன்
கண்களுடன், கண்கள் கலந்து விடுமானால், அங்கு வாய் வார்த்தைகளால் ஏது பயனும் இல்லையாம்..

கடுமொழி என்பது நம் பகைவரைக் கண்டதும் பேசும் பேச்சு ஆகும்..

அதுபோல கடுவிழி என்பது பகைவரைச் சுட்டு எரிக்கும் விழிகள்..

ஆனால்..இப்போது இது எதற்கு என்கிறீர்களா?

அப்படி கடுமொழியும், கடுவிழியும் கொண்டு பகையுணர்வு போல பேசினாலும், உள்ளத்தால் அன்பு இருந்தால் அதைக் காட்டி கொடுத்துவிடுமாம்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றாற்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு (1097)

பகையுணர்வு இல்லாத கடுமொழியும்,பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்போரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்


No comments: