Friday, August 30, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 13

துறவு அதிகாரத்திலேயே வள்ளுவரின் மேலும் சில சொல் விளையாட்டுகளைப் பார்ப்போம்

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு (347)

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன

(பற்றிவிடா,பற்றினை, பற்றிவிடா)

மேலும் சொல்கிறார்...

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (350)

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கின்றாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும்.துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்

(பற்றுக,பற்றற்றான்,பற்றினை,பற்றுக, பற்று...)

No comments: