அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு,கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (552)
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
இக்குறளில் வேலொடு, கோலொடு எனச் சொல்பவர் அடுத்த குறளில் சொல்கிறார்..
நாடொறும் நாடி முரைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் (553)
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர் குலைந்து போய்விடும்
நாடொறும், நாடி,நாடொறும்,நாடு...இது வள்ளுவரின் சொல்லாட்சி ஆகும்
மேற்சொன்ன குறள்கள் வரும் அதிகாரம் கொடுங்கோன்மை ஆகும்
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (552)
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
இக்குறளில் வேலொடு, கோலொடு எனச் சொல்பவர் அடுத்த குறளில் சொல்கிறார்..
நாடொறும் நாடி முரைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் (553)
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர் குலைந்து போய்விடும்
நாடொறும், நாடி,நாடொறும்,நாடு...இது வள்ளுவரின் சொல்லாட்சி ஆகும்
மேற்சொன்ன குறள்கள் வரும் அதிகாரம் கொடுங்கோன்மை ஆகும்
No comments:
Post a Comment