Friday, September 6, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு- 38

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகும் அளவிற்கான துயரத்தை உண்டாக்கி விடுமாம்.

ஒருவரின் குணம்,குடிப்பிறப்பு.குற்றங்கள்.குறையா இயல்புகள் என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்பு கொள்ள வேண்டும்.

இதையே

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு (793)

என்கிறார்.

குணன், குடிமை, குற்றம்,குன்றா...

அடுத்து

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு (791)

என நட்பாராய்தல் அதிகாரத்திலேயே இக்குறலினையும் சொல்லியுள்ளார்.

நாடாது, நட்டல்,நட்டபின்,நட்பு

விளக்கம்-
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும்

No comments: