Saturday, September 7, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 41

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக் கூட ஒருவன் கொள்ளக் கூடாது

அதேபோல...தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதை விட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்

இப்படியெள்லாம் பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தில் சொல்லியுள்ள வள்ளுவர்..இவ்வதிகாரத்திலும் தன் சொல் விளையாட்டு ஒன்றினைக் காட்டியுள்ளார்.

தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல் (876)

பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களை பிரிந்துவிடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்

தேறினும், தேறாவிடினும், தேறான்..

No comments: