Wednesday, September 4, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 31


தூது அதிகாரத்தில் தூதுக்குரிய தகுதியாக சொல்கிறார்..

அன்பான குணமும் புகழ் வாய்ந்த குடிப்பிறப்பும் அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பது தூதுக்குரிய தகுதிகளாகும்

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு (688)

துணிவு,துணை,தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவருக்குத் தேவயானவைகளாகும்

தூய்மை,துணைமை,துணிவுடைமை, வாய்மை...!!!!

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன் (689)

விடுமாற்றம்,வடுமாற்றம்..

ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்

No comments: