Thursday, September 5, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 36

அதிகாரம் - பொருள் செயல்வகை

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது

ஆனால், பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார்.
அவரின் சொல்விளையாட்டை கீழ்கண்ட குறளில் பாருங்கள்...

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் (751)

பொருளல்ல,பொருளாக, பொருளல்ல, பொருள்

விளக்கம்-
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக் கூடிய அளவிற்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை

No comments: