Wednesday, September 4, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 32

முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதைப்போல அதிகம் நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலுமாக இருப்பார்கள் எங்கிறார் மன்னரைச் சேர்ந்து ஒழுகல் அதிகாரத்தில்.மேலும்....

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும் (692)

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமென தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தைத் தரும்.

இக்குறளில், மன்னர்,மன்னரான்,மன்னிய,விழைப,விழையாமை என்ற விளையாட்டினை ரசித்தீர்களா?!

No comments: