Sunday, September 8, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 47

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள் அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்..

இழித்துப் பேசாமலும் ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உள்ளவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்புறும்

இரவு அதிகாரத்தில் இப்படியெல்லா, சொன்னவர் அடுத்து இரவச்சம் அதிகாரத்தில் சொல்கிறார்..

வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை

என்றும்..

கூழ்தான் குடிக்க வேண்டும் என்னும் நிலையானாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை

என்றும் சொல்கிறார்.

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரபபர் இரவன்மின் என்று (1067)

கையில் உள்ளதை மறைத்து "இல்லை"என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்

இரப்பான், இரப்பாரை,இரப்பிற்,கரப்பர்,இரவன்


No comments: