Wednesday, September 11, 2019

வள்ளுவத்தில் கோடிகள் - 55

குறளில் ஏழு குறள்களில் கோடி என்ற சொல் சொல்லப்பட்டுள்ளது.

அவை-

1) வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
    தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377)

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்காவிடின் கோடிப்பொருள் குவித்தாலும்,அதன் பயனை அனுபவிப்பது என்பதே அரிதாகும்

2)
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும் (639)

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதைவிட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்

3)
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும் (816)

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்

4)

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி பெறும் (817)

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது

5)
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் (954)

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்

6)
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லாக் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல் (1005)

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயனில்லை

7)

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும் (1061)

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்


No comments: