Sunday, September 8, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 43

பிறப்பினால் அனைவரும் சமம்.செய்யும் தொழிலில் காட்டுகின்ற திறமையில் மட்டுமே வேறுபாடு காணமுடியும்..

இப்படி :"பெருமை" எனும் அதிகாரத்தில் சொல்பவர் மேலும் சொல்கிறார்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர் (973)

பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்ல.இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரே ஆவார்கள்.

மேலிருந்தும்,மேலல்லார்,மேலல்லர், கீழிருந்தும், கீழல்லார், கீழல்லவர்  ..வள்ளுவரின் சொல் விளையாட்டு இது

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல் (979)

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும்.ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்

பெருமை,பெருமிதம்,இன்மை, சிறுமை, பெருமிதம்...

No comments: