சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
வெள்ளம்போல துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயெ அத்துன்பம் விலகி ஓடிவிடும்.
இடுக்கண் அழியாமையில் இப்படியெல்லாம் சொன்ன வள்ளுவர் மேலும் சொல்கிறார்..
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர் (623)
துன்பம் சூழும்போது, துவண்டு போகாதவர்கள்,அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்
இடும்பை,இடும்பை,இடும்பை,இடும்பை என இடும்பையை நான்கு இடங்களில் சொல்லி சொல் விளையாட்டினை விளையாடுகிறார்.
இன்பத்துள் இன்பம் விழியாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன் (629)
என்று மற்றொரு குறளில் இன்பத்துள் இன்பம், துன்பத்துள் துன்பம் என்கிறார்.
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள்,துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள்.இரண்டினையும் ஒன்றுபோல் கருதுவர்.
வெள்ளம்போல துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயெ அத்துன்பம் விலகி ஓடிவிடும்.
இடுக்கண் அழியாமையில் இப்படியெல்லாம் சொன்ன வள்ளுவர் மேலும் சொல்கிறார்..
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர் (623)
துன்பம் சூழும்போது, துவண்டு போகாதவர்கள்,அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்
இடும்பை,இடும்பை,இடும்பை,இடும்பை என இடும்பையை நான்கு இடங்களில் சொல்லி சொல் விளையாட்டினை விளையாடுகிறார்.
இன்பத்துள் இன்பம் விழியாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன் (629)
என்று மற்றொரு குறளில் இன்பத்துள் இன்பம், துன்பத்துள் துன்பம் என்கிறார்.
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள்,துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள்.இரண்டினையும் ஒன்றுபோல் கருதுவர்.
No comments:
Post a Comment