Friday, September 6, 2019

வள்லுவரின் சொல் விளையாட்டு - 39

பேதைமை...

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல் (832)

பேதைமை, பேதைமை,காதன்மை

தன்னால் இயலாத செயல்களை விரும்பி அவற்றில் தலையிடுவது என்பதௌ பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில் (833)

நாணாமை,நாடாமை,நாரின்மை,பேணாமை

வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும் ,அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைமைகளின் இயல்பாகும்.




No comments: