Thursday, September 5, 2019

வள்ளுவரும் சொல்விளையாட்டும் - 37

நட்பு கொள்வது போன்ற அரிய செயல் இல்லை.அதுபோல பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

வெறும், சிரித்து மகிழ மட்டுமே நட்பு அல்ல.நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்து திருத்துவதற்காகவும் ஆனதே!

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பப்போல பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பாகும்.

இப்படியெல்லாம் நட்பு எனும் அதிகாரத்தில் சொன்னவரின் சொல் விளையாட்டு எங்கே?

இதோ இந்தக் குறளில்...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு (786)

முகநக, அகநக,நட்பது,நட்பன்று,நட்பு

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு  அடையாளமல்ல.இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

No comments: